கரிசல் வட்டார இலக்கியவாதியான கி.ராஜநாராயணன் அவர்கள் தனது படைப்புகளில் மக்களின் வாழ்க்கை அனுபவங்களைக் குறித்தும் குடும்பத்தில் வாழ்கின்றவர்கள் தங்களது வாழ்க்கையை வழி நடத்திச் செல்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் முறைகள் குறித்தும், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைகள் மூலம் மக்கள் எவ்வாறு வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதைப் பற்றியும் அக்குடும்பத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள், தொழில்கள் ஆகியன குறித்து சொல் ஓவியமாக கி.ரா அவர்கள் சித்தரித்துக் காட்டியுள்ளார். பெண்கள் குடும்பத்தில் சந்திக்கின்ற பிரச்சனைகள் குறித்தும் அவர்களின் குடும்ப வாழ்க்கையின் எளிமை முறையினையும் எடுத்துக்காட்டியதோடு மட்டுமல்லாமல் அதில் கரிசல் வட்டார மக்களின் வழக்குச் சொற்களை கையாண்டுள்ளார். இதனடிப்படையில் கி.ரா அவர்களின் கதைகளில் குடும்பம் சார் வாழ்வியல் முறைகளை எடுத்துரைப்பது இவ்வா#வின் நோக்கமாகும்.
Shanlax (Sun,) studied this question.