உலக மக்களின் வாழ்வுக்கு வேண்டிய நல்ல கருத்துகளை கொண்டிருக்கும் காரணத்தினால் திருக்குறள் உலகப் பொதுமறையாகப் போற்றப்படுகிறது. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக விளங்க கூடியது நீர். மனித வாழ்விற்கு மிக முக்கிய தேவையான நீரை திறம்பட மேலாண்மை செய்வதற்கும் தேவைப்படும் காலங்களில் நீரை தேக்கி வைத்து அந்த நீரை உயிரினங்களின் உடல் வளர்ச்சிக்கும், உணவு தேவைக்கும் அத்தியாவசியமான ஒன்றாக அமைகின்றது. வள்ளுவர் நீரினை முதன்மைப் பொருளாக எண்ணி (நீர் இல்லாமல் இந்த உலகம் மற்றும் மனித வாழ்க்கை இருக்காது என்று பதிவு செய்துள்ளார். ஐம்பூதங்களில் ஒன்றான நீரைத் தருகின்ற மழையைத் திருவள்ளுவர் வான்சிறப்பு, மற்ற அதிகாரங்களில் எவ்வாறு அறம் சார்ந்து காணப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
shanlax (Thu,) studied this question.