தொடக்க கால மனிதன் தன் உணவு தேவைக்காக காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடி உண்டான். பின் இயற்கையாக கிடைத்த காய்கனிகளை தின்று உயிர் வாழ்ந்தான். பின்னர் அவன் படிப்படியான வளர்ச்சியில் வேளாண்மை தொழிலை செய்ய கற்றுக் கொண்டான். இவ்வாறு நாள்தோறும் ஓய்வின்றி உழைத்த அவனுக்கு ஓய்வு தேவைப்பட்டது. அந்த நேரத்தில் பறவைகளின் ஓசையை கேட்டு பாடம் முயற்சி செய்தான். பின்னர் ஆடி பாடி தெரிந்தான். இயற்கையை தெய்வமாக அவன் வழிபட்டான். அதன் பின் இயற்கைக்கு விழா எடுக்கலானான். இவ்வாறு அவன் வழிபட்ட நிகழ்வுகளையும் அவன் மேற்கொண்ட விழாக்களையும் சங்க இலக்கிய நூலான அகநானூற்றினைக் கொண்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
Shanlax Journals (Thu,) studied this question.