மொழி என்பது மக்களின் எண்ணங்களை வெளியிடுவதற்கும், கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கும் ஒருபாலமாக அமைவதோடு மட்டுமல்லாமல், தனக்குள் காணப்படும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த ஒரு ஊக்கியாக செயல்படுகிறது. ஒருமனிதன் பிறப்பு முதல் இறப்பு எம்மொழி வாயிலாக சிறப்பு மிக்க காரியங்களைச் செய்கிறானோ அதுவே அவனது தாய்மொழியாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. ஆனால் தமிழ்மொழி இன்றளவும் உலகளவில் போற்றப்படுவதற்கு காரணம் அம்மொழியின் தனித்தன்மைகள் தான். அவ்வகையில் இக்கட்டுரையானது பைந்தமிழ் மொழியாகிய தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கின்றது.
shanlax (Tue,) studied this question.