இறைவன் நம்முடைய அகத்திலும் புறத்திலும் நிறைந்திருப்பவன். இறைவனின் அருள் ஒரு மனிதனின் வாழ்விற்கு வழிகாட்டியாகவும் துணையாகவும் அமைகின்றது. இறைவனின் அருள் வேண்டி மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் அவனது நம்பிக்கையை வெளிப்படுத்தும் எனக் கூறலாம். இல்லத்தில் சடங்குகளும் அவை சார்ந்த நிகழ்வுகளும் பெண்களோடு தொடர்பு உடையவைகளாக அமைந்துள்ளன. சங்க இலக்கியத்தில் தலைவியின் உடலில் நடத்தைகளில் மாறுபாடு கண்ட தாய் அதனைக் கண்டறிய விளைகிறாள். உள் உணர்வின் உந்துதலின் வெளிப்பாடாக அவை அமைகிறது. அவ்வகையில் சங்க இலக்கியத்தில் காணலாகும் பழக்க வழக்கமான குறிக் கேட்டல், சிலம்புகழி நோன்பு பற்றிய கருத்துக்களை எடுத்துரைப்பது கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Mon,) studied this question.