மனிதன் தன் இனத்துடன் சேர்ந்து வாழும் இயல்புடையவன். அவன் தன் இனத்தாரோடு கூடிக் கலந்து வாழ்வதில் சமூகம் உருவாகிறது. தனி மனித வாழ்விற்கும் சமூக வாழ்விற்கும் இடையில் நிரம்ப வேறுபாடு உண்டு. சமுதாயத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். குழந்தைகளும் பெற்றோர்களும் மட்டுமே உள்ள குடும்பம் தனி குடும்பம் ஆகும். குழந்தைகள் பெற்றோர்கள் தாத்தா பாட்டி மற்ற உறவினர்களுடன் சேர்ந்து வாழும் குடும்பம் கூட்டுக் குடும்பம். பார்க்கும் மனிதர்கள் தங்கள் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்து உள்ளனர். நாம் மற்றவர்களுக்காகவும் மற்றவர் நமக்காகவும் விட்டுக் கொடுத்து வாழ கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் உரிமைக்காக அனைவரும் குரல் கொடுப்பதும் தங்களுக்கு உரிய பங்களிப்பை மகிழ்ச்சியுடன் செ#து முடிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதைப் போலவே பொது தேவைகளையும் நிறைவேற்றுவதில் பங்கேற்க வேண்டும். குடும்பம் என்பது நம் வாழ்வின் ஆதாரம். சமூகம் என்பது நிம்மதியான வாழ்க்கைக்கு வழி செ#கிறது. இவ்வாறு மக்கள் உலகில் வாழும் தன்மையை மானுடவியல் எனலாம். எனவே இவ்வா#வுக் கட்டுரை “திருத்தொண்டர் காப்பியத்தில் மானுடவியல்” என்ற தலைப்பில் அமைந்துள்ளது
shanlax (Mon,) studied this question.