அழகிய உலகம் அதிசயிக்கத்தக்க வகையில் இயங்குகிறது. ஒவ்வொரு செயலும் அறிவியல் பார்வையோடு பார்க்கப்படுகின்ற போது அறிவியல் குறித்த கேள்விகள் நம்முன் எழுப்பப்படுகின்றன. காலை சுரியன் உதிப்பதாயினும், மாலை சந்திரன் ஒளிர்வதாயினும் அனைத்திலும் இயற்கை சார்ந்த அறிவியலின் ஆக்கம் அளவு கடந்திருப்பதை நம்மால் உணர முடியும். கால ஓட்டத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் அறிவியல் இணைந்திருப்பது போல சமகாலஇலக்கியங்களிலும் அறிவியல் பரவி காணப்படுகின்றது பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்து ஆளுமையிலிருந்து புத்தம் புது அறிவியல் உருவாக்கப்படுகின்றன அதன் அடிப்படையில் ஆயிஷா இரா.நடராசன் அவர்கள் எழுதிய சர்க்யுட் தமிழன் என்னும் சிறுகதைத் தொகுப்பில் பல்வேறு வகையான அறிவியல் சிந்தனைகள் புதைந்திருக்கிறது. இக்கதைகளில் வெறுமனே அறிவியல் மட்டும் பேசப்படவில்லை. மாறாக அறிவியலோடு சமூகப்பிரச்சினையும் பின்னிப் பிணைந்துள்ளது. டோக்கன் எண் 666, ரெஜி, இதை தயவு செய்து வாசியுங்கள் அப்பா, வாழைப்பழ சோம்பேறிகள், பிள்ளை பிடிக்கிறவன், சந்திரன் காம்ப்ளக்ஸ், பிறந்தநாள் ராவுத்தர் கடை, கனவுக்கருவி, அருட்பெரும் ஜோதி, டிகிரி காபி, ஐ ஜாலி, சர்க்யுட் தமிழன், வைட்டா எக்ஸ் என்னும் சிறுகதைகளில் எவ்வாறு சமூகச்சிக்கல்கள் அறிவியல் சிந்தனைகளோடு வெளிப்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையின் வாயிலாக காணலாம்.
shanlax (Tue,) studied this question.