காலங்கள் பல கடந்து சென்றாலும் இயற்கையினால் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் எப்பொழுதும் மனித இனத்தில் மாறாமல் இருப்பது உறவுகள் தான் பல தலைமுறைகள் கடந்துவந்தாலும் எப்பொழுதும் முறிந்துவிடாமல் இருப்பதும் உறவுகள் தான். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அன்னன், தம்பி, அக்கா, தங்கை, ஆகிய உறவுகள் இருந்தும் தனித்து வாழ்பவர்கள் திருநங்கைகள். ஆனால் இந்த மனித இனத்தில் எந்த ஒரு தவறும் செ#யாமல் தன்னுடைய பிறப்பையே தவறு என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள் ஆவார்கள். சமூகத்தில் இல்லாமல் விலங்குகள், பறவைகள் அவற்றின் உடலில் ஏதேனும் மாற்றத்தினைக் கொண்டு பிறந்தால் மக்கள் தெய்வமாக வணங்குவர் ஆனால் மனிதர்கள் தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றத்தினைக் கொண்டு வாழும் திருநங்கைகளை இம்மனித இனம் மாற்றி நிறுத்துகிறது ஆகவே அவர்கள் தமக்கென ஒரு உறவுகளையும் குடும்பத்தையும் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்கள் உறவு முறைகளைக் குறித்து இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்
shanlax (Tue,) studied this question.