தமிழ் மொழியில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரம் தோன்றுவதற்கு முன்னிருந்த தமிழிலக்கியம் அகத்திணை, புறத்திணை பாடல்களாக அமைந்து தனிமனித உணர்ச்சிகளை உணர்த்தின. ஒருவரது வாழ்க்கையை முழுமையாகப் பார்த்து, உயர்ந்த உண்மைகளைக் காட்டி, மனித சமுதாயத்தை வழிநடத்திச் செல்லும் இலக்கியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகிறது. காவிரிப் பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்து, குலவொழுக்கப்படி திருமணம் செய்து, இல்லறம் நடத்திய கோவலன் கண்ணகிவாழ்க்கை வரலாற்றை விளக்கும் நூலாக அமைகிறது.
Shanlax (Sun,) studied this question.