தேனினும் இனிய நற்செந்தமிழ் மொழியின் தலைசிறந்த பெருங்காப்பியங்களுள்சிலப்பதிகாரம்” முதன்மையான ஒன்றாகும். சிலப்பதிகாரத்திற்கும் மூன்றிற்கும் மிகப்பெருந் தொடர்புண்டு. அவற்றுள் அறம், பொருள், இன்பம் சிறப்புற எடுத்துக் கூறுவது இந்நூல். பல்வேறு வாழ்வியல் கூறுகளை இந்நூல் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் விரிந்து விரவிக்கிடக்கும் அறிவியல் சிந்தனைகள் அதன் கோட்பாடுகள் இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக இருந்து கொண்டிருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அப்பழந்தமிழ் இலக்கியங்களுள் சிலம்பில் இடம்பெற்றுள்ள அறிவியல் செய்திகளைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அறிவியல் பற்றி... அறிவியல் உண்மையைக் காணும் முயற்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் முன்னேறிக் கொண்டும் வருகிறது. இவைகள் இயற்பியல், வேதியியல், நிலவியல் போன்றவைகளுக்குப் பொருந்தும். மானிட வாழ்வை ஒட்டி நம்முடன் கலந்த அறிவியல் தொழில்நுட்பங்களை மொழி, இலக்கியங்கள் எடுத்துரைக்கும் அறிவியல் செய்திகளாகும். மனத்தளவில் புலன்களைத் தூண்டி புற இயற்கையை ஆராய் ந்து அதிலிருக்கும் திட்ப நுட்பங்களைக் கொண்டு வாழ்வை வளப்படுத்துவது அறிவியல் என்கிறார் கவியோகி சுத்தானந்த பாரதி.
shanlax (Tue,) studied this question.