இலக்கியம் என்பது சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. எவ்வகை இலக்கியமாயினும், எந்தச் சமுதாயத்தின் உள்ளடக்கமாகத் தோன்றுகிறதோ அச்சமுதாயத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும், நம்பிக்கையையும் மக்களின் அறிவையும் எடுத்துரைக்கும் என்பதில் ஐயமில்லை. இதன் அடிப்படையில் நமது தமிழ் இலக்கியங்களும் பல அரிய கருத்துக்களைக் கொண்டுள்ளன. மேலும் இன்றைய அறிவியலுக்கு ஒரு முன்னோடியாகவும் திகழ்கின்றன. இருபதாம் நூற்றாண்டை அறிவியல் யுகம் என்று கூறலாம். இந்நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலும் சாதனைகளும் ஏராளம் ஏராளம் ஆலமரமாய் தழைத்து பரந்து விரிந்து விண்ணை முட்டும் இன்றைய அறிவியல் வளர்ச்சிக்குப் பண்டைக்கால இதிகாசங்களும், புராணங்களும் இலக்கியங்களும் விதையாக இருந்ததை இக்கட்டுரை விளக்குகின்றது.
shanlax (Tue,) studied this question.