உலகம் தோன்றிய நாள் தொட்டு மனித இனம் ஆண் பெண் என்ற இரு உயிரிகளால் உருவாக்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. இதிலே பெண்தான் முதன் முதலில் தாய்த்தலைமை சமுதாயத்தை ஏற்று, நன்கு வழி நடத்தினாள் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் காலப்போக்கில் நிலவுடைமைச் சமுதாயமும் போர்க்கால சமுதாயமும் காலூன்றியபோது அனைத்துப்பொருள்களும் ஓரிடம் குவியத் தொடங்கின. அவற்றைத் தலைமை ஏற்று வழிநடத்தத் தெரிந்தவன் ஆண்தான் என்ற பொய்யான கட்டமைப்பு நம் சமூகத்தில் உலகமெங்கும் நிலைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் மொழி தோன்றிய பல ஆண்டுகளுக்குப் பிறகு, இலக்கியங்களைக் கூடத் தலைமை ஏற்று நடத்த ஆணினமே தகுதி வாய்ந்தது என்பதை முச்சங்க வரலாறும் மெய்ப்பிக்கின்றது.
Shanlax (Sun,) studied this question.