தொடக்க காலம் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை மானுட மேம்பாட்டுச் சிந்தனைகளில் மனிதன் தன் மனதைச் செலுத்தி வருகின்றான். அவனுடைய மனித நேயப் பார்வை மானுட மேம்பாட்டுக்கு வழிவகுக்கிறது. மனித நேயம் என்பது மொழி, இனம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த ஓர் உணர்வு. மனிதன் வகுத்துக்கொண்ட பண்பாட்டின் வளர்ச்சியோடு பிணைந்து நிற்கும் உணர்வு. இம்மனித நேய உணர்வினால் அன்பு வளரும்“ஏற்றத்தாழ்வுகள் நீங்கும் ஒப்புரவு நிலைக்கும். மனித ஆற்றல்கள் உயரும். மனித மதிப்புகள் போற்றப்படும். மொழி, இனம், மதம் என்பவற்றால் வேற்றுமைப்பட்டுக்கிடக்கும் மக்கள் ஒன்றுபட்டு வாழ்வர். உலகத்தின் ஒற்றுமை ஓங்கி, வையம் செழிப்புறும். இப்படிப்பட்ட மானுடம் உருப்பெற மனிதநேயம் நம் ஒவ்வொருக்கும் அவசியம்.
shanlax (Wed,) studied this question.