தமிழ் நாகரிகம் ஆதி நாகரிகம். உலக இனத்தினோடு உறவாடி வாழும் இனம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தனது நாகரிகச் சிறப்பால் நானிலம் போற்றும் இனம் தமிழினம். உளவியல், பொருளியல், அரசியல் நிர்வாகம் புகோளவியல், மண்ணியல், மானுடவியல் மற்றும் மருந்தியல் எனப் பல்வேறு கூறுகளையும் தனதாக்கிய தமிழிலக்கியங்கள் காலத்தின் கற்பகத்தருவாகும். சித்தர் இலக்கியங்கள் உணவை மருந்தாக்கியது மருந்தை உணவாக்கியது. தமிழ் இலக்கியத்தின் அறிவியல் கூறுகள் ஊற்றின் நீராய் காலந்தோறும் சுரப்பதைக் காண முடிகிறது. இக்கூறுகளை மாதிரி ஆய்வு மற்றும் விளக்க முறை ஆ#வு அணுகுமுறையில் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
shanlax (Tue,) studied this question.