இலக்கியம் என்பது ஒரு உயர்ந்த நோக்கத்தோடு இயற்றப்படுவதாகும். இலக்கியங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த காலச்சூழலில் தேவையான கருத்துகளை மையமாக கொண்டு எழுதப்பட்டது. மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்துவதே இலக்கியங்களின் நோக்கமாகும். மனித வாழ்விற்குத் தீங்கியிழைக்கிற காரியங்களைக் கூறி, அதிலிருந்து தப்பிக்கொள்கிற வழியையும் கூறுகிறது இக்கால இலக்கியங்கள். இன்றைய காலகட்டத்தில் புதுக்கவிதைகள் மனித வாழ்வின் இழிவையையும், அதை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமென்பதையும்நமக்கு காட்டுகிறது. கி.தனவேல் அவர்களின் “வழி விடுங்கள்” புதுக்கவிதை தொகுப்பு மானுடத்தின் வீழ்ச்சியையும் அதை மேம்படுத்துவதற்கான வழியையும் கூறுகிறது.
shanlax (Tue,) studied this question.