நாட்டார் மக்களின் வழிபாட்டுத் தெய்வங்கள் எல்லாம் பெருந்தெய்வ, சிறுதெய்வ நோக்கில் அமைந்தாலும், இரண்டுக்கும் ஒரே நிலையில் தோற்றமும் அமைகின்றது. தெய்வங்கள் மக்களின் கனவு, எதிர்பாராத சம்பவம் என்ற செயல்களின் மூலம் தோன்றி மறைந்து விடுகின்றன. இவற்றை, மெய்மைப்படுத்தும் காரணமாக ஆவி ஒன்றினை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அச்செயலே, ஆவியின் மேல் அச்சமுற்று தனக்குத் தீங்கு நிகழாமல் இருக்க வழிபடத் தொடங்கியது எனில், ஓர் இடத்தில் தெய்வ வழிபாடு தொடங்குவதற்கு முன், அங்கு ஆவியானது தோன்றி மனிதர்களுக்கு ஏதாவதொரு வடிவில் (குரலாகவோ, உருவமாகவோ) காட்சி அளித்து மறைந்துவிடும். அந்த இடத்தில் அங்கு வாழும் மக்கள் வழிபடத் தொடங்கினர் என்பது, விருதுநகர் நாட்டுப்புற மக்களின் வாய்மொழிக் கதைகளினால் தெய்வ வரலாறுகளை அறிதல் ஆய்வின் கருதுகோளாக அமைகிறது
Shanlax (Sun,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: