இலக்கிய நெடும்பரப்பிலே கி.பி பதினெட்டாம் நூற்றாண்டில் இருந்து தொடங்கும் காலத்தைத்தற்காலம்” அல்லது சமகாலம்” என்று எடுத்துக் கொள்ளலாம். வாழ்வியலுக்கு வரையறை தந்த சங்க இலக்கியத்தில் சங்கத் தமிழரின் ஆளுமைத் திறனைப் பல்துறையிலும் கண்ணுறுகின்றபோது வியப்பே மேலிடுகின்றது. எந்தவொரு நவீன வசதியும் இல்லாத சங்க காலத்தில் இன்றும் கண்டுபிடிக்க முடியாத பல அறிவியல் கண்டுபிடிப்புகளை அருகிலிருந்து கண்டது போல் எடுத்துரைத்துள்ள சங்க காலமக்களின் சிந்தனைத் திறன் அறிவியல் தொழில்நுட்பத்தையும் கடந்தது என்பதற்கு எத்தனையோ உதாரணங்களை சங்க இலக்கியத்தின் வாயிலாக எடுத்துச் சொல்லலாம். அவ்வகையில் சமகால அறிவியலுக்கு முன்னோடியாகத் திகழ்வது சங்க இலக்கியமே என்பதற்கு சில உதாரணங்களைச் சுட்டுகின்ற முனைப்பில் இக்கட்டுரை தொடர்கின்றது.
shanlax (Tue,) studied this question.