உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழி உலகத் தமிழர்களின் உயிர்த்துடிப்பாகும். தமிழ்ச் செம்மொழி நூல்கள் தமிழின் உயர்வினை உயர்த்திப் பிடிக்கும் தகைமை பெற்றவை. சங்க இலக்கியங்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப்படுபவை சங்க மருவிய கால இலக்கியங்களாகும். இவை அறம், அகம், புறம் என்னும் முத்திறத்தில் பாடப்பெற்ற சிறப்புடையவை. பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களுள் திருக்குறள் செந்நாப்போதார் எனப்படும் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. திருவள்ளுவரின் நிலவியல் பார்வை பற்றி விளக்குவதே இவ்ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
shanlax (Tue,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: