தன்னம்பிக்கை என்பது வாழ்வின் அடித்தளம். தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்வை எதிர்கொள்ள இயலாது. இலக்கியம் என்ற சொல் இலக்கு இயம் ஸ்ரீ குறிக்கோளை இயம்புவது எனப் பொருள் படுகிறது. ஒவ்வொருஇலக்கியமும் நமக்கு ஏதேனும் ஒரு குறிக்கோளை இயம்புகின்றது அந்த குறிக்கோள் நமக்கு நம்பிக்கையை அளிக்கின்றது ஒரு மனிதன் துவண்டு விழுகும் பொழுதெல்லாம் அவனுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பது இலக்கியம் ஆகும். இலக்கியங்களில் வெளிப்படும் தன்னம்பிக்கை கருத்துக்கள் மனிதனை நல்வழிப்படுத்துகின்றன. பண்டைத் தமிழரின் தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கு தேவையான வாழ்வியல் கருத்துக்களை எடுத்துரைக்கின்றன. அவற்றுள் புறநானூற்றுப் பாடல்கள் வழி வெளிப்படும்தன்னம்பிக்கை கருத்துக்களை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Wed,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: